Song : Thollaiyirum Piravi – Sivapuranam | Tamil Lyrics
Music & Vocal : Sivapuranam D V Ramani
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#sivapuranam#sivansongs#vijaymusicals
பாடல் : தொல்லையிரும் பிறவி – சிவபுராணம் | தமிழ் பாடல்வரிகள்
இசை & குரலிசை : சிவபுராணம் D V ரமணி
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளிய தற்சிறப்புப் பாயிரம்
தொல்லையிரும் பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே
எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் என்கோன்
திருவாசகம் எனும் தேன் திருவாசகம் எனும் தேன்
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க
இமைபோழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க
கோகழி ஆண்ட குரு மனிதன் தாழ் வாழ்க
ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாழ் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்சகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்கு சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி
நேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாய பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி
திருபெருந்துறை சிவனே போற்றி
திருவிளையாடல் நாயகா போற்றி
திருபெருந்துறை சிவனே போற்றி
திருவிளையாடல் நாயகா போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளால் அவன் தாழ் வணங்கி
சிந்தை மகிழ சிவபுராணந்தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
கண்ணுதளால் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் காழில் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்
எண் நிறைந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல் அசுரராகி முனிவராய் தேவராய்
செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
திருவண்ணாமலை ஜோதியே போற்றி
திருசிற்றம்பல நாயக போற்றி
திருவண்ணாமலை ஜோதியே போற்றி
திருசிற்றம்பல நாயக போற்றி
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான்
வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து
source
Om namachivaya
சிவன் சிவன் சிவன் சிவன்
எல்லோரும் நலம்மாக வழம்மாக வாழ்க வளமுடன் சிறப்புடன் வாழ்க வாழ்க வளமுடன்
Op
Om Namachivaya potri
OM NAMASIVAYA OM
Om namashivaaya pottery pottery pottery pottery
தேவாரம் ,திருவாசகம் போன்ற திருமுறைகள் சிவனடியார்கள் மூலம் சிவபெருமானால் அருளப்பட்டவை. அவைகளை அப்படியே ஓர் எழுத்து மாறாமல் பாடுவது
தான் முறைமை. இடைச்
செருகல்கள் பதிகங்களின் மகிமையை குறைக்கும் பாவச் செயலாகும். தயவுசெய்து பதிகங்களை
உள்ளபடி அப்படியே பாட வேண்டுகிறேன். பதிகப் பாராயணம்பஜனைஅன்று
இடையிடையே நம் விருப்பத்தைச் சேர்ப்பதற்கு. மன்னிக்க வேண்டுகிறேன்."சிவநெறி
திருத்தண்டன்."
Siva. Tiruvasagam book where we got it. Please if you're knows. Information please
அருமையான சிவதமிழ் பாடலில், எங்கிருந்து வந்தது, '" ஜெய ஜெய சங்கர,ஹர ஹர சங்கர " அருவேருப்பாக இருக்கிறது. திருத்துங்கள்…..
பிலை உள்ளது நான் சிவன் அடியார்
Excellent,excellent!!!!!!!
கோச் செங்கட் சோழ நாயனார்
https://youtu.be/IWKdQBq4e9Y
Thennadudaya shivane potri…ennattavarkum iraivaa potriiii
.